Saturday, September 10, 2016

E.V.R Maniyammaiyar Memorial Widow Daughter’s Marriage Assistance Scheme

தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கும், சமுதாயத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் சமூக நலத்துறையின் மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் செயல்படுத்தும் திட்டம் ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண உதவித்திட்டம்:-

நோக்கம்:- ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்துவதில் போதிய நிதிவசதி இல்லாததால், அவர்களுக்கு ஏற்படும் சிரமத்தை தவிர்க்கும் வகையில் திருமணத்திற்கு உதவி வழங்குதல்.

வழங்கப்படும் நிதிஉதவி:-

திட்டம்-1: ரூ.25,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக நான்கு கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.
திட்டம்-2: ரூ.50,000/- (காசோலை) (ம) திருமாங்கல்யம் செய்வதற்காக நான்கு கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.

பயன்பெறுபவர்:-
      மணப்பெண்ணின் விதவைத் தாயிடம் வழங்கப்படும், விண்ணப்பித்த விதவைத் தாய் இறந்துவிடும் நேரவில், மணமகள் பெயரில் வழங்கலாம்.

தகுதிகள் (மணப்பெண்):-

1. கல்வித்தகுதி:-
திட்டம்-1: கல்வித் தகுதி ஏதும் தேவையில்லை.

திட்டம்- 2
      (i) பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
      (ii) பட்டயப் படிப்பு (Diploma) எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

2. குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

3. திருமணத்தன்று மணமகளுக்கு 18 வயது நிரம்பியிருக்க வேண்டும். (உச்ச வயது வரம்பு இல்லை).

4. விதவைத் தாயின் ஒரு பெண்ணுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.

5. திருமணத்திற்கு நாற்பது நாட்களுக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைக்கப்படவேண்டிய சான்றுகள்:-
      1) கணவரின் இறப்பு சான்று (அ) விதவை சான்று (நகல்)
      2) வருமான சான்று (அசல்)
      3) மணப்பெண்ணின் வயதிற்கான சான்று (நகல்)
      4) திருமண அழைப்பிதழ் மற்றும் புகைப்படம்

அணுகவேண்டிய அலுவலர்:-

      மாவட்ட சமூகநல அலுவலர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்

No comments:

Post a Comment

PROBATE

Ø   Every person of sound mind not being a minor may dispose of his property by way of WILL. Any such WILL left by the testator shall...