Saturday, September 10, 2016

Dr. Dharmambal Ammaiyar Ninaivu Widow Remarriage Assistance Scheme

தமிழக அரசு ஏழை, எளிய மக்களுக்கும், சமுதாயத்தில் நலிவுற்ற பிரிவினருக்கும் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதில் சமூக நலத்துறையின் மாவட்ட சமூகநல அலுவலகம் மூலம் செயல்படுத்தும் திட்டம் Dr.தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித் திட்டம்:-



நோக்கம்:- விதவை மறுமணத்தை ஊக்குவித்து, அவர்களுக்கு மறுவாழ்வு அளித்தல்.

வழங்கப்படும் நிதிஉதவி:-
திட்டம்-1: ரூ.25,000/- வழங்கப்படுகிறது (இதில் ரூ.15,000/- காசோலையாகவும், ரூ.10,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக நான்கு கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.
திட்டம்-2: ரூ.50,000/- வழங்கப்படுகிறது (இதில் ரூ.30,000/- காசோலையாகவும், ரூ. 20,000/- தேசிய சேமிப்பு பத்திரமாகவும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக நான்கு கிராம் (1/2 சவரன்) 22 காரட் தங்க நாணயம்.

பயன்பெறுபவர்:- மறுமணம் செய்து கொள்ளும் தம்பதியர்கள்.
தகுதிகள்:-
1. கல்வித்தகுதி:-
திட்டம்-1: கல்வித் தகுதி ஏதும் இல்லை.
திட்டம்- 2:
      (i) பட்டதாரிகள், கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமாகவோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக் கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்று இருத்தல் வேண்டும்.
      (ii) பட்டயப் படிப்பு (Diploma) எனில் தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

2. வருமான வரம்பு இல்லை.

3. மணமகளின் குறைந்தபட்ச வயது 20ஆக இருத்தல் வேண்டும். மணமகனின் வயது 40க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

4. திருமண நாளிலிருந்து 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இணைக்கப்படவேண்டிய சான்றுகள்:-
      1) விதவைச் சான்று (நகல்)
      2) மறுமணத்திற்கான திருமண பத்திரிகை (அசல்)
      3) பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு தேர்ச்சி சான்று (நகல்)

அணுகவேண்டிய அலுவலர் / அலுவலகம்:-

      மாவட்ட சமூகநல அலுவலர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்

No comments:

Post a Comment

PROBATE

Ø   Every person of sound mind not being a minor may dispose of his property by way of WILL. Any such WILL left by the testator shall...