Sunday, September 11, 2016

Annai Sathya Ammaiyar Ninaivu Goverment Orphanage

அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம்:-

நோக்கம்:- இலவச உணவு, உடை, உறைவிடம் மற்றும் மருத்துவ உதவி அளிப்பதன் மூலம் ஆதரவற்ற, கைவிடப்பட்ட மற்றும் நிராகரிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கல்வி அளித்தல்.

வழங்கப்படும் நிதிஉதவி:- உணவு, உறைவிடம், கல்வி, சீருடை, இலவச பாடநூல்கள், உயர்கல்வி படிக்க நிதிஉதவி மற்றும் நோட்டுபுத்தகங்கள், மருத்துவ வசதி, காலணிகள் மற்றும் படுக்கை வசதி அளித்தல்.

பயன்பெறுபவர்:-

ஆதரவற்ற மற்றும் கைவிடப்பட்ட குழந்தைகள் மற்றும் பெற்றோர் இல்லாத அல்லது தாயோ, தந்தையோ மட்டுமே உள்ள குழந்தைகள், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள பெற்றோரால் பராமரிக்க முடியாத குழந்தைகள் மற்றும் ஆயுள் தண்டனை அனுபவிக்கும் பெற்றோர், இருவரும் உயிருடன் இருந்தும் தந்தை / தாய் கடம் மாற்றுத்திரனுடையோரக இருந்து தாய் / தந்தையால் கவனிக்கப்படும் நிலையிலுள்ள குடும்பங்களின் குழந்தைகள்.

தகுதிகள்:-
1) கல்வித் தகுதி ஏதும் தேவையில்லை.
2) ஆண்டு வருமானம் ரூ.72,000/-க்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3) 5 வயது முதல் 18 வயது வரையிலான பெண் குழந்தைகள் தங்கி பயில அனுமதிக்கப்படுகிறார்கள்.
4) 5 வயது முதல் 10 வயது வரையிலான ஆண் குழந்தைகள் தங்கி பயில அனுமதிக்கப்படுகிறார்கள்.
5) கல்வி ஆண்டு தொடங்கும் முன் விண்ணப்பிக்க வேண்டும்.
6) பெண் குழந்தைகள் மேல் படிப்புக்காக 21 வயது வரை அனுமதிக்கப்படுகிறார்கள்.

இணைக்கப்படவேண்டிய சான்றுகள்:-
1) கல்வி சான்று (நகல்)
2) வருமான சான்று (நகல்)
3) இருப்பிடச் சான்று (நகல்)
4) ஆதரவற்றவர் என்பதற்கான சான்று

அணுகவேண்டிய அலுவலர்:- மாவட்ட சமூகநல அலுவலர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர், கண்காணிப்பாளர், அரசு குழந்தைகள் காப்பகம். http://socialdefence.tn.nic.in/

No comments:

Post a Comment

PROBATE

Ø   Every person of sound mind not being a minor may dispose of his property by way of WILL. Any such WILL left by the testator shall...